நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் சாதனை

மாட்ரிட்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் அணியினர் சாதித்துள்ளனர்.

சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை  புகாயோ சகா, கேப்ரியல் மார்டினெலி ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 5-1 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணியினர் சாதித்துள்ளனர்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் அர்செனல் அணியினர் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி சாதித்துள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் பாயர்ன்முனிச் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset