நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு

மையாமி: 

உலக கால்பந்து சங்கம் (FIFA) வட அமெரிக்காவில் நடைபெறும் கோடை உலகக்கோப்பைக்கு தனது செயலாக்க செலவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM392 மில்லியன்) குறைத்துள்ளதாக The Athletic செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 வருட ஆண்டு அறிக்கையில், FIFA 2023–26 செலவுகள் அடங்கிய பட்ஜெட்டில், செயலாக்க செலவுகளுக்காக 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM4.39 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட் 3.756 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM14.72 பில்லியன்) உட்பட்டதாகும்.

இந்த 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் (RM4.39 பில்லியன்) செலவில் 280 மில்லியன் அமெரிக்க டாலர் (RM1.09 பில்லியன்) தொழில்நுட்ப சேவைகள், 159 மில்லியன் அமெரிக்க டாலர் (RM621.69 மில்லியன்) நிகழ்வு போக்குவரத்து, 145 மில்லியன் அமெரிக்க டாலர் (RM566.95 மில்லியன்) பாதுகாப்பு, 79 மில்லியன் அமெரிக்க டாலர் (RM308.89 மில்லியன்) விருந்தினர் மேலாண்மை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாதுகாப்பு, லாஜிஸ்டிக்ஸ், அணுகல் வசதிகளை உள்ளடக்கிய செயலாக்க பட்ஜெட் குறைத்தல் RM392 மில்லியனை மீறியதால் இந்த நடவடிக்கைகள் திணறலை ஏற்படுத்தியுள்ளன The Athletic பத்திரிகைக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.

"FIFA எப்போதும் பட்ஜெட் திறமையை ஆய்வு செய்து செலவுகளைக் கட்டுப்படுத்தும், மேலும் அதிகபட்ச வருமானம் உலகளாவிய காற்பந்தின் வளர்ச்சிக்குச் செலவிடப்படும். இது யாரையும் அதிர்ச்சியடையச் செய்யக் கூடாது, ஏனென்றால் ஒவ்வொரு போட்டி மற்றும் நிகழ்ச்சிக்கும் முன்பு பட்ஜெட் ஆய்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது," என்று FIFA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

48 அணிகளுக்கான உலகக்கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 16 இடங்களில் 11 ஜூன் முதல் 19 ஜூலை வரை நடைபெறும்.

அமெரிக்க காங்கிரஸ், இந்த இடங்களின் பாதுகாப்பு செலவுக்கு 625 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM2.44 பில்லியன்) ஒதுக்கியிருந்தாலும், பகுதி அரசு மூடப்பட்டதால் உள்நாட்டு பாதுகாப்பு துறையில் இதுவரை நிதி வழங்கப்படவில்லை.

"FIFA செயலாக்க வெற்றியையும், பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களையும் தவற விடாது. உலக அளவில் மிகப்பெரிய போட்டியில் சிறந்த அனுபவம் வழங்க பல வளங்களை நாங்கள் செலவிடுகிறோம். செயலாக்கம் முறையாக நடைபெற சுமார் 5,000 நபர்களைப் பணிக்கு நியமித்துள்ளோம்," என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset