
செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
சிங்கப்பூர்:
முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகையைத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஆடவருக்கு நான்கு ஆண்டுகள், 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதர்சா மரைக்கார் முகமது பகாரூடின் என்ற 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு தமது கடன்களை அடைத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 3 விழுக்காடு வரையிலான வட்டி தருவதாகப் பகாரூடின் கூறியுள்ளார்.
இதையடுத்து நான்கு முதலீட்டாளர்கள் 865,000 வெள்ளியை ஆடவரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2018ஆம் ஆண்டு தமது மற்றொரு நிறுவனமான நாணய, நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகருதீன் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
மேலும் தமது தொழில் நண்பரான ஃபரூக் என்பவரையும் பகாரூடின் மோசடி செய்துள்ளார்.
ஃபரூக் சொத்து, வாகனங்களை விற்பனை செய்பவர். ஃபரூக் சொத்து வாங்கக் கொடுத்த 2.9 மில்லியன் வெள்ளியில் 500,000 வெள்ளியைக் கடன் அடைக்கப் பகாரூடின் பயன்படுத்திக் கொண்டார்.
பகாரூடின் மீது சந்தேகமடைந்த ஃபரூக் தமது பணத்தைக் கேட்டபோது 2.4 மில்லியன் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் முதலீட்டாளர்கள் பணம் மலேசியாவில் திருட்டுப்போனதாகப் பகாரூடின் பொய்யுரைத்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பகாரூடின் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm
இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்
October 19, 2025, 9:07 pm
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm