செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
சிங்கப்பூர்:
முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகையைத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஆடவருக்கு நான்கு ஆண்டுகள், 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதர்சா மரைக்கார் முகமது பகாரூடின் என்ற 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு தமது கடன்களை அடைத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 3 விழுக்காடு வரையிலான வட்டி தருவதாகப் பகாரூடின் கூறியுள்ளார்.
இதையடுத்து நான்கு முதலீட்டாளர்கள் 865,000 வெள்ளியை ஆடவரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2018ஆம் ஆண்டு தமது மற்றொரு நிறுவனமான நாணய, நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகருதீன் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
மேலும் தமது தொழில் நண்பரான ஃபரூக் என்பவரையும் பகாரூடின் மோசடி செய்துள்ளார்.
ஃபரூக் சொத்து, வாகனங்களை விற்பனை செய்பவர். ஃபரூக் சொத்து வாங்கக் கொடுத்த 2.9 மில்லியன் வெள்ளியில் 500,000 வெள்ளியைக் கடன் அடைக்கப் பகாரூடின் பயன்படுத்திக் கொண்டார்.
பகாரூடின் மீது சந்தேகமடைந்த ஃபரூக் தமது பணத்தைக் கேட்டபோது 2.4 மில்லியன் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் முதலீட்டாளர்கள் பணம் மலேசியாவில் திருட்டுப்போனதாகப் பகாரூடின் பொய்யுரைத்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பகாரூடின் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
