செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
சிங்கப்பூர்:
முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகையைத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஆடவருக்கு நான்கு ஆண்டுகள், 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதர்சா மரைக்கார் முகமது பகாரூடின் என்ற 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு தமது கடன்களை அடைத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 3 விழுக்காடு வரையிலான வட்டி தருவதாகப் பகாரூடின் கூறியுள்ளார்.
இதையடுத்து நான்கு முதலீட்டாளர்கள் 865,000 வெள்ளியை ஆடவரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2018ஆம் ஆண்டு தமது மற்றொரு நிறுவனமான நாணய, நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகருதீன் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
மேலும் தமது தொழில் நண்பரான ஃபரூக் என்பவரையும் பகாரூடின் மோசடி செய்துள்ளார்.
ஃபரூக் சொத்து, வாகனங்களை விற்பனை செய்பவர். ஃபரூக் சொத்து வாங்கக் கொடுத்த 2.9 மில்லியன் வெள்ளியில் 500,000 வெள்ளியைக் கடன் அடைக்கப் பகாரூடின் பயன்படுத்திக் கொண்டார்.
பகாரூடின் மீது சந்தேகமடைந்த ஃபரூக் தமது பணத்தைக் கேட்டபோது 2.4 மில்லியன் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் முதலீட்டாளர்கள் பணம் மலேசியாவில் திருட்டுப்போனதாகப் பகாரூடின் பொய்யுரைத்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பகாரூடின் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 8:25 pm
பேராளர் மாநாட்டில் ஜாஹிட்டை விமர்சித்ததற்காக மஇகா தலைவரை ஜம்ரி சாடினார்
November 18, 2025, 8:22 pm
ஈசிஆர்எல் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி நொறுங்கிய கார்: பெண் உயிர் தப்பினார்
November 18, 2025, 8:21 pm
நாங்கள் மஇகாவை சந்தித்து விவாதிப்போம்: முஹம்மது ஹசான்
November 18, 2025, 8:20 pm
மகளுக்காக கடைசியில் இந்திரா காந்தியை வீதி போராட்டத்தில் தள்ளியது தான் மிச்சம்: சிவசுப்பிரமணியம் சாடல்
November 18, 2025, 4:56 pm
பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
