செய்திகள் மலேசியா
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
கெஅடிலான் கட்சித் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் பண அரசியல் விவகாரத்தில் கட்சி தேர்தல் குழு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.
கெஅடிலான் தொகுதித் தேர்தல்களில் பெருநாள் பணம் என்ற வீடியோ பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பத்து தொகுதி கெஅடிலான் தேர்தலில் போட்டியிடும் பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்.
இப்போது 100 ரிங்கிட். தேர்தல் தினத்தன்று 100 ரிங்கிட். அவர் வெற்றி பெற்றால் போன்ஸ் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் தலைவரும் முன்னாள் பத்து தொகுதி தலைவர் அசென் மாட் ராசிப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் கட்சித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான நான் யாருக்கும் பணம் கொடுக்க உத்தரவிடவில்லை.
வீடியோவைப் பார்க்கும்போது வாக்காளர்களுடன் நோன்பு துறக்கும் விழாவில் நான் பணம் கொடுத்தேன் என்று கூறுகிறார்கள்.
அப்படியொரு சம்பவம் முற்றிலும் நடக்கவில்லை. மேலும் அது என் அணியின் அட்டவணையிலும் இல்லை.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நான் தயாராக உள்ளேன் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
திரெங்கானு, கிளந்தானில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
