
செய்திகள் மலேசியா
7 மாநிலங்களில் கெஅடிலான் தொகுதி தேர்தல்கள் நிறைவடைந்தன; உயர் பதவிகளுக்கான தேர்தல் மே 24இல் நடைபெறும்: ஜலேஹா
கோலாலம்பூர்:
கெஅடிலான் தொகுதி தேர்தல் 7 மாநிலங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
கட்சித் தேர்தல் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு மாநிலங்களில் தொகுதி, இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கான தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
மேலும் ஏப்ரல் 18 முதல் 20 வரை தொடங்கும் கிளந்தான், திரெங்கானு, கோலாலம்பூர், பகாங், பினாங்கு, ஜொகூர், சபா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு தேர்தல் குழு தற்போது தயாராகி வருகிறது.
வாக்களிக்கும் செயல்முறைக்குத் தயாராக, இரண்டாம் கட்டத்திற்கான அனைத்து வாக்காளர்களும் அடில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது விண்ணப்பத்தை புதிய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும்
2025 நீதிபதித் தேர்தலின் முடிவுகள் தொடர்பான ஆட்சேபனைகளையும் தேர்தல் குழு கவனத்தில் கொண்டதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு ஆட்சேபனையையும் ஆய்வு செய்யும்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட பதவிகள், மத்திய மகளிர் பிரிவு, மத்திய இளைஞர் பிரிவு ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் வரும் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm