செய்திகள் மலேசியா
சுங்கைப்பூலோ தொகுதி கெஅடிலான் தேர்தலில் டத்தோஶ்ரீ ரமணனின் அணி அமோக வெற்றி
சுங்கைப்பூலோ:
சுங்கைப்பூலோ தொகுதி கெஅடிலான் தேர்தலில் அதன் தலைவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் தலைமையிலான அணி அமோக வெற்றியை பதிவு செய்தது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கை பூலோவின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் தொகுதி தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார்.
தொகுதி துணைத் தலைவர் பதவிக்கு ஐந்து முனைப் போட்டி நிலவியது.
இந்தப் போட்டியில் டத்தோஶ்ரீ ரமணன் அணியின் வேட்பாளரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் நிர்வாகியுமான இக்ராமி மஸ்லி 2,222 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்.
தொகுதி உதவித் தலைவர் பதவியை டத்தோஶ்ரீ ரமணன் அணி வேட்பாளர் ஜி. சுரேஸ் வென்றார். அவர் 2,462 வாக்குகளைப் பெற்று தொகுதி தலைமைப் பதவியில் அணியின் முழு ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் தொகுதி இளைஞர் பகுதியை டத்தோஶ்ரீ ரமணனின் அணி முழுமையாக ஆக்கிரமித்தது. இதில் பாரிக் ஜமான் தலைவராக வெற்றி பெற்றார்.
பெண்கள் பிரிவில், சரிமா லிசுட் 1,039 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நூராசிகின் மாரமை தோற்கடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 5:17 pm
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
December 5, 2025, 8:56 am
புங் மொக்தார் காலமானார்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
