
செய்திகள் மலேசியா
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
கோலாலம்பூர்:
பிறை இல்லாத தேசியக் கொடியை பத்திரிக்கையில் வெளியிட்டு தவறு செய்த சீன செய்தித்தாள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் இதனை வலியுறுத்தினார்.
சீன அதிபர் ஷீ ஜின் பிங்கின் மலேசிய வருகையை தொடர்ந்து மலேசிய, சீனக் கொடிகளை உள்ளடக்கிய படத்தை அந்த செய்தி தாள் வெளியிட்டது.
ஆனால் பத்திரிகையில் வந்த தேசியக் கொடியில் பிறை இல்லை.
இச்சம்பவம் தொடர்பில் சின் சியூ செய்திதாள் நிர்வாகம் மன்னிப்பு கோரியது. அதே வேளையில் இது தொழில்நுட்பப் பிழைக்கு என அது விளக்கியது.
இந்நிலையில் வெறுமனே மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது. தேசியக் கொடி இறையாண்மை சார்ந்த விஷயம்.
மன்னிப்பு கேட்பது அறியாமை, முட்டாள், தவறாகப் புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்."
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழமையான (1929 இல் நிறுவப்பட்ட) ஒரு பிரபலமான செய்தித்தாள், அரை மில்லியனுக்கும் அதிகமான (500,000) வாசகர்களைக் கொண்டுள்ளது.
மேலும் ஒரு அனுபவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதன் சொந்த தேசியக் கொடியில் தவறுகளைச் செய்கிறார்களா?
ஒரு சிறிய மன்னிப்பு போதுமா? யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm