
செய்திகள் மலேசியா
நாட்டின் 5-ஆவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி காலமானார்
கோலாலம்பூர்:
நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி இன்று காலமானார்.
அவருக்கு வயது 85 ஆகும்.
துன் அப்துல்லா அஹ்மத் படாவி காலமானத் தகவலை அவருடைய மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் ஐஜேஎன்-இல் சிகிச்சை பெற்று வந்த துன் அப்துல்லா அஹ்மத் படாவி இன்று இரவு 7.10 மணிக்கு காலமானாதாகத் தெரிவித்துள்ளார்.
அவரின் மறைவிற்கு அனைவரும் பிராத்தனை செய்யுமாறும் கைரி கேட்டுக் கொண்டார்.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துன் அப்துல்லா அஹ்மத் படாவி கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் ஐந்தாவது பிரதமராகச் சேவையாற்றினார்.
பினாங்கை பூர்வீகமாகக் கொண்ட அப்துல்லா, அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசு ஊழியராக இருந்தார்.
1978-ஆம் ஆண்டு கெபாலா பதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அந்த நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1980-ஆம் ஆண்டு ஹுசைன் ஒன் பிரதமராக இருந்த போது, அவர் கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹுசைன் பதவி விலகிய பிறகு, மகாதீரின் முதல் அமைச்சரவையில் அப்துல்லா பிரதமர் துறையில் அமைச்சரானார்.
கல்வி முதல் பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை மற்றும் நிதி வரை பல்வேறு அமைச்சர்கள் பதவிகளைப் பெற்றனர், மேலும் அன்வர் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டு சீர்திருத்த இயக்கம் தொடங்கிய உடனேயே, 1999 ஆம் ஆண்டு மகாதீரின் மூன்றாவது துணைப் பிரதமரானார்.
2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அப்துல்லா அஹமத் படாவி நாட்டின் 5-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப் பொது தேர்தலில் தேசிய முன்னணி 219 தொகுதிகளில் 198 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இருப்பினும், மகாதிர் மற்றும் எதிர்க்கட்சிகள் இருவரிடமிருந்தும் அவரது அரசாங்கத்தின் மீதான தொடர்சர்ச்சைகளால் மக்களவையில் தேசிய முன்னணி நீண்டகாலமாக வைத்திருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் இழந்தது.
அப்போது பக்காத்தான் கூட்டணி ஆட்சியைப் பிடித்து ஐந்து மாநில அரசுகளைக் கைப்பற்றியது.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக, அப்துல்லா ஒரு வருடம் கழித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அப்துல்லா பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி, தனது குடும்பம் மற்றும் எழுத்தில் தனது நேரத்தைச் செலுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 16, 2025, 9:11 pm
பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்
April 16, 2025, 8:20 pm
பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாதது: மாமன்னர்
April 16, 2025, 8:10 pm
சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு
April 16, 2025, 2:08 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
April 16, 2025, 2:06 pm
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
April 16, 2025, 2:05 pm
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
April 16, 2025, 2:05 pm
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
April 16, 2025, 2:04 pm