நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப் பெருநாள் விடுமுறையில் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர் 

ஜோகூர் பாரு:

சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் எதிர்வரும் புனித வெள்ளி நீண்ட வார இறுதியின் போது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

சமீபத்தில் நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியின்போது (மார்ச் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை) சுமார் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர் என ஆணையம் கூறியது

ஆக அதிகமாக 28ஆம் தேதி ஒரே நாளில் 538,000க்கும் அதிகமானோர் அந்த இரு சோதனைச் சாவடிகளைக் கடந்ததாகச் சொல்லப்பட்டது.

சுமார் 3 மணிநேரம் வரை போக்குவரத்து நெரிசலில் பயணிகள் காத்திருக்க நேரிட்டது என்றும் ஆணையம் தெரிவித்தது.

புனித வெள்ளி நீண்ட வார இறுதி விடுமுறை நாள்களின்போதும் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிவரலாம் என்றும் அது கூறியது.

எல்லையைக் கடக்க பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம் என்றும் சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையம் ஆலோசனை கூறியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset