
செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாள் விடுமுறையில் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்
ஜோகூர் பாரு:
சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் எதிர்வரும் புனித வெள்ளி நீண்ட வார இறுதியின் போது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
சமீபத்தில் நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியின்போது (மார்ச் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை) சுமார் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர் என ஆணையம் கூறியது
ஆக அதிகமாக 28ஆம் தேதி ஒரே நாளில் 538,000க்கும் அதிகமானோர் அந்த இரு சோதனைச் சாவடிகளைக் கடந்ததாகச் சொல்லப்பட்டது.
சுமார் 3 மணிநேரம் வரை போக்குவரத்து நெரிசலில் பயணிகள் காத்திருக்க நேரிட்டது என்றும் ஆணையம் தெரிவித்தது.
புனித வெள்ளி நீண்ட வார இறுதி விடுமுறை நாள்களின்போதும் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிவரலாம் என்றும் அது கூறியது.
எல்லையைக் கடக்க பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம் என்றும் சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையம் ஆலோசனை கூறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 5:14 pm
சூரிய சக்தி தகடுகளுடன் புதுவகை சாலை உணவுக் கடைகள் திட்டத்திற்கு அரசு 150 மில்லியன்...
June 1, 2025, 4:59 pm
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அரசு யாருக்கு தான் பதில் தரும் எ...
June 1, 2025, 4:37 pm
சிந்தூர் நடவடிக்கைகள்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் மலேசியாவ...
June 1, 2025, 2:55 pm
அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
June 1, 2025, 2:53 pm
புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்
June 1, 2025, 2:49 pm
தமிழ் கலாச்சாரத்தின் பல கூறுகளை தமிழ் வண்ண விழா வெற்றிகரமாக எடுத்துக் காட்டியுள்ள...
June 1, 2025, 2:47 pm
பத்துகாஜாவில் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்ட தாய்சேய் கிளினிக் அவசியமாகிறது: சிவக்...
June 1, 2025, 2:45 pm
மலேசிய மாணவர்கள் ஜப்பானிய பணி கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும்: ஃபஹ்மி
June 1, 2025, 2:44 pm
ஆச்சேவில் டைவிங் செய்த மலேசியர் மரணம்
June 1, 2025, 12:58 pm