
செய்திகள் உலகம்
மியன்மாரில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு முற்றாகச் செயலிழக்கக்கூடும்: ஐ நா எச்சரிக்கை
யாங்கூன்:
மியன்மாரில் ஏற்கெனவே வலுவிழந்துள்ள சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு முற்றாகச் செயலிழக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதிக எண்ணிக்கையில் உள்ள நோயாளிகளைச் சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாக அது சொன்னது.
மருந்துமாத்திரைகளுக்கும் மருத்துவப் பொருள்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.
மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 3,500ஐத் தாண்டியுள்ளது.
அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
மியன்மாரைச் சென்ற மாதம் 7.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் உலுக்கியதில் 17 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லாண்டாக மியன்மாரில் உள்நாட்டுப் போர் நீடிக்கும் நிலையில் அது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
நூறாண்டில் மியன்மாரை உலுக்கியுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
ஏராளமானோர் இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். 80 விழுக்காட்டுக்கும் அதிகமான கட்டடங்களுக்குச் சேதம்.
சீனா மியன்மாருக்குக் கூடுதல் மனிதாபிமான உதவிகளை அனுப்பவிருப்பதாகக் கூறியுள்ளது.
வீட்டைக் கட்டித்தருவது, அறுவைச் சிகிச்சைகள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றுக்கு அவை கைகொடுக்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm