செய்திகள் இந்தியா
டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு: புரளி என்று போலிசார் தகவல்
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால், அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:09 pm
விமானத்தில் பரபரப்பு: அவசரக் கதவைத் திறக்க முயன்ற பயணி
April 4, 2026, 12:35 pm
உத்தரகண்டில் பரபரப்பு: உணவு உட்கொண்டிருந்தபோது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
April 2, 2026, 6:35 pm
நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணைச் சித்திரவதை செய்த கணவர் கைது
April 2, 2026, 6:33 pm
மனைவியைக் கொன்ற கணவனுக்குச் சிறை: காஜியாபாத் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
April 2, 2026, 1:06 pm
சண்டிகரில் பரபரப்பு: பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
April 2, 2026, 11:09 am
