நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு: புரளி என்று போலிசார் தகவல் 

புதுடெல்லி: 

டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.

டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு  தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால், அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset