
செய்திகள் மலேசியா
லெவி கட்டணத்தை கொண்டு முதலாளிகள் புதிய பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
லெவி கட்டணத்தை கொண்டு முதலாளிகள் புதிய பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுடன் வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை வலியுறுத்தினார்.
எச்ஆர்டி கோர்ப் கடந்தாண்டு 2.3 பில்லியன் ரிங்கிட் லெவி கட்டணத்தை வசூல் செய்தது.
வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்து எச்ஆர்டி கோர்ப் சாதித்துள்ளது.
பெரிய அளவிலான லெவி கட்டணத்தை வசூல் செய்வதால் மட்டும் என்ன பயன் என கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் எச்ஆர்டி கோர்ப் கிட்டத்தட்ட 2.2 பில்லியன் ரிங்கிட்டை தொழிலாளர்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக திருப்பி தந்துள்ளது.
இது கிட்டத்தட்ட 89 சதவீத லெவி கட்டண வசூலிப்பாகும்.
மேலும் பல்வேறான பயிற்சி திட்டங்கள் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று எச்ஆர்டி கோர்ப் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
இந்நிகழ்வில் எச்ஆர்டி கோர்ப் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல் ஹுரைய்ரா, தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், பெர்ஜாயா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ வின்சண்ட் டான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய அமைச்சர், இவ்வாண்டு தொழிலாளர்களுக்கு அதிகமான தொழில் திறன் பயிற்சிகளை வழங்க மனிதவள அமைச்சும் எச்ஆர்டி கோர்ப்பும் இலக்கு கொண்டுள்ளது.
அதே வேளையில் லெவி கட்டணத்தை கொண்டு புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பும் பயிற்சிகளும் வழங்க முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் நாட்டில் வேலையில்லா பிரச்சினைகள் குறையும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:43 pm
10,000 தொழிலாளர்களுக்கு பணியிட முதலுதவி திறன்களை மனிதவள அமைச்சு பயிற்றுவிக்கும்: ஸ...
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித...
June 12, 2025, 4:42 pm
உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர்: போதைப...
June 12, 2025, 4:35 pm
கிந்தா இந்தியர் சங்கம், செட்டியார் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் "மணக்கும் தமிழ் இலக்கி...
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்...
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm
31.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்; 5 ஆண்டுகளில் 5,703 நபர்கள் கைது: எம்...
June 12, 2025, 4:14 pm