
செய்திகள் உலகம்
புறப்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன் அவசரமாக நிறுத்தப்பட்ட விமானம்
தோக்கியோ:
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன் அவசரமாக நிறுத்தப்பட்டது.
ஏப்ரல் 7-ஆம் தேதி ஜப்பானின் தோக்கியோ நகரிலுள்ள ஹனெடா விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.
சுமார் 40 மீட்டர் அகலம் கொண்ட விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றது.
மணிக்கு 90 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வரை வேகத்தைக் கூட்டிய பிறகே விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதை விமானி அறிந்தார்.
அவர் விமானத்தை நிறுத்துவதற்குள் அது ஓடுபாதையின் ஓரத்தில் இருந்த விளக்கு மீது மோதியது.
80 பயணிகள் இருந்த விமானத்தில் யாரும் காயமடையவில்லை.
பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.
சம்பவத்துக்குப் பின் ஓடுபாதை ஒரு மணி நேரம் மூடப்பட்டது.
விமானம் ஓடுபாதையில் செல்லும்போது பாதையில் நடுவே உள்ள கோட்டில் செல்வது வழக்கம்.
ஓடுபாதையின் ஓரத்தில் இருந்த விளக்கு ஓடுபாதையின் நடுவில் இருப்பதாக விமானி தவறாக எண்ணியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொள்கின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm