
செய்திகள் மலேசியா
வர்த்தகத்தில் இழப்புகளைச் சந்தித்தாலும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: தேசிய வருமான வரி வாரியம்
கோலாலம்பூர்:
வர்த்தகத்தை நடத்தும் தனிநபர்கள் இழப்புகளைச் சந்தித்தாலும், தங்களது வருமான அறிக்கையை உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவர்களில் பலர் இழப்புகளைச் சந்தித்தால் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
இருப்பினும் அது தவறான கருத்து என கோலாலம்பூர் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் துணை தலைமை இயக்குநர் சைட் முஹம்மத் சுக்ரி சைட் முஹம்மத் கமில் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகத்தில் இழப்பு என்பது வழக்கமான ஒன்றாகும். இலாபம் அல்லது இழப்பாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருமான அறிக்கையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
வர்த்தகம் நஷ்டமாக இருந்தால் வருமான வரி விதிக்கப்படாது என்பதால் கவலைப்படாமல் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சைட் முகமட் சுக்ரி கூறினார்.
தொழில் நடத்தும் தனி நபர்களுக்கு சம்பளம் போன்ற பிற வருமானம் இருந்தால், ஒருங்கிணைந்த வருமானம் பாரம் B யில் கணக்கிடப்படும்.
இது தொழில் நடத்தும் தனிநபர்களுக்கான வருமான வரி பாரமாகும். எனவே, தொழில் நடத்துவோருக்கு வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது
என்று அவர் கூறினார்.
வர்த்தகத்தில் இலாபம் அல்லது நஷ்டம் : B பாரத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:09 pm
தாய்லாந்து - கம்போடிய எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து பிரதமரை தொடர்பு கொள்வே...
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 4:04 pm
2023-ஆம் ஆண்டு முதல் தெலுக் இந்தான் பள்ளி மாணவர்களுக்கு1 மில்லியனுக்கும் அதிகமான ந...
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:18 pm
பெட்ரோனாஸின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்: பிரத...
June 6, 2025, 3:10 pm
டத்தாரான் மெர்டேக்காவில் கைகலப்பு சம்பவம்: மேலும் இருவர் கைது
June 6, 2025, 3:08 pm
5.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 9 பேர் கைது: ஹுசைன் ...
June 6, 2025, 3:07 pm