
செய்திகள் ASEAN Malaysia 2025
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
கோலாலம்பூர்:
அமெரிக்காவின் புதிய தீர்வைக்குக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, புருணை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் கலந்துரையாடினர்.
புதிய வரிகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி அவர்கள் பேசினர்.
அடுத்த வாரம் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் சந்திக்கவிருக்கின்றனர். அப்போது அது பற்றி மேலும் விவாதிக்கப்படலாம்.
கம்போடியா, வியட்நாம், தாய்லந்து உட்பட ஆசியான் நாடுகள் புதிய தீர்வையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வரும் 9-ஆம் தேதி மேலும் புதிய வரிகள் நடப்புக்கு வரவிருக்கின்றன.
அமெரிக்காவின் புதிய அணுகுமுறை அதைத் தனிமைப்படுத்திவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm
வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் ஹனோய் சென்றடைந்தார்
February 20, 2025, 1:31 pm
ஆசியான் - அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்த மலேசியா விரும்புகிறது: முஹம்மத் ஹசான்
February 12, 2025, 12:03 pm