நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் புதிய தீர்வைக்குக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

சிங்கப்பூர், மலேசியா, புருணை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் கலந்துரையாடினர். 

புதிய வரிகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி அவர்கள் பேசினர். 

அடுத்த வாரம் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் சந்திக்கவிருக்கின்றனர். அப்போது அது பற்றி மேலும் விவாதிக்கப்படலாம். 

கம்போடியா, வியட்நாம், தாய்லந்து உட்பட ஆசியான் நாடுகள் புதிய தீர்வையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வரும் 9-ஆம் தேதி மேலும் புதிய வரிகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. 

அமெரிக்காவின் புதிய அணுகுமுறை அதைத் தனிமைப்படுத்திவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset