செய்திகள் ASEAN Malaysia 2025
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
சுபாங்:
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இன்று மியான்மருக்கு ஒரு நாள் பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த மார்ச் 28 அன்று மியான்மாரை மிகவும் மோசமான நிலநடுக்கம் தாக்கியது.
இது அந்நாட்டில் மிகப் பெரிய பேரழிவை தந்துள்ளது.
இதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த மனிதாபிமானப் பணிக்கு தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சா கூட்டாக தலைமை தாங்குகிறார்.
இது மனிதாபிமான நடவடிக்கைகளில் நெருக்கமான ஆசியான் (ASEAN) ஒத்துழைப்பைக் குறிக்கிறது.
மேலும் மியான்மார் மக்களுக்கு பிராந்திய ஒற்றுமை, ஆதரவை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:56 pm
தென்கிழக்கு ஆசியாவுடன் அமெரிக்கா 100% ஆதராகவும் துணையாகவும் இருக்கும்: டிரம்ப்
October 26, 2025, 9:48 pm
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
October 26, 2025, 9:42 pm
கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 9:38 pm
கிழக்காசிய உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மலேசிய வந்தடைந்தார்
October 26, 2025, 5:05 pm
டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு
October 26, 2025, 3:45 pm
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
October 26, 2025, 2:45 pm
