நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சீபீல்ட், பண்டார் சௌஜனா புத்ரா இடையேயான சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.

இதனை  பிளஸ் மலேசியா பெர்ஹாட் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

தெற்கு நோக்கிச் செல்லும் பயனர்கள் சீபீல்ட் டோல் பிளாசாவிற்கு திருப்பி விடப்பட்டு, பண்டார் சௌஜனா புத்ரா டோல் பிளாசா வழியாக வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பில் மீண்டும் நுழைவார்கள்.

வடக்கு நோக்கிச் செல்லும் பயனர்கள் பந்தர் சௌஜனா புத்ரா டோல் பிளாசாவில் இருந்து வெளியேறி, சீபீல்ட் டோல் பிளாசா வழியாக எலிட் நெடுஞ்சாலையில் மீண்டும் நுழையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யுஎஸ்ஜே,  புத்ரா ஹைட்ஸ் டோல் பிளாசாக்கள் வழியாக  எலிட் நெடுஞ்சாலையின் அனைத்து நுழைவாயில்களும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

பயனர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், Waze அல்லது Google Maps போன்ற வழிசெலுத்தல் பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset