நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி:  செல்வ கணபதி

கோலாலம்பூர்:

மகளின் அறுவை சிகிச்சைக்காக மலேசியர்கள் அளித்த நன்கொடைகளுக்கு நன்றி என்று ஹர்ஷீதா சாயின் தந்தை ஆர். செல்வ கணபதி கூறினார்.

எட்டு வயது எஸ். ஹர்ஷீதா சாய்க்கு அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 1.5 மில்லியன் ரிங்கிட் தேவைப்பட்டது.

இந்நிதியை திரட்டுவதற்கான மலேசியர்களிடம் உதவி கேட்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக அந்நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1.5 மில்லியன் ரிங்கிட்  திரட்ட உதவிய மலேசியர்களின் 42 வயதான ஆர். செல்வ கணபதி  நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும் தனது மகள் பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு மாதத்திற்குள் இந்தத் தொகை வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த சவாலான நேரத்தில் உங்கள் தாராள மனப்பான்மைக்கும் வலுவான ஆதரவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி, என் மகனின் சிகிச்சைக்குத் தேவையான நிதி திரட்டும் இலக்கை நாங்கள் அடைந்துவிட்டோம்.

சமீபத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நன்கொடை அளித்தார். இது எங்கள் நிதிச் சுமையைக் குறைக்க உதவியது.

உங்கள் நன்கொடையால், இப்போது பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் மேலும் சிகிச்சை, அறுவை சிகிச்சையைத் தொடர முடிகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset