
செய்திகள் ASEAN Malaysia 2025
மியன்மார், தாய்லாந்தில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிலை தொடர்பாக கலந்துரையாட ஆசியானின் சிறப்பு அவசர கூட்டம்
கோலாலம்பூர்:
மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆசியானின் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்பு அவசர கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு மலேசியாவின் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் தலைமை தாங்கினார்
காணொலி வாயிலாக ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிகள், மற்றும் பார்வையாளராக திமோர் லெஸ்தே அமைச்சரும் கலந்து கொண்டார்
வெளியுறவு துறை அமைச்சின் இந்த கூட்டமானது ஆசியான் உறுப்பு நாடுகளின் எல்லைகளற்ற ஆதரவினை இது புலப்படுத்துவதாக டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்
இவ்வேளையில் மியன்மார், தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசியான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆசியான் உறுப்பு நாடுகளின் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆசியான் உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டு ஆசியான் நிர்வாக பொறுப்பினை மலேசியா ஏற்றுள்ளதால் மலேசியா இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 8:04 am
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
October 14, 2025, 9:43 am
மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது: ஹசான்
September 29, 2025, 9:40 am
ஆசியான் தகுதியின் அடிப்படையில் மலேசியாவிற்கு வருகை புரிய டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm