
செய்திகள் மலேசியா
2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை; 12 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: போலிஸ்
ஷாஆலம்:
கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு தங்கக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் தொடர்பாக சாட்சிகள், சந்தேக நபர்கள் உட்பட 12 நபர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதன் வாயிலாக இச்சம்பவம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
விசாரணைக்கு உதவுவதற்காக 12 நபர்களின் வாக்குமூலங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
கடந்த சனிக்கிழமை, மாலை 4.56 மணியளவில் பேரங்காடியில் அமைந்துள்ள தங்கக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து போலிசாருக்கு புகார் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் ஏழு தட்டு நகைகளைத் திருட துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதன் மதிப்பு 2 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர் ஒரு காரில் தப்பிச் சென்றார்.
மறு நாள் உலு சிலாங்கூர் புக்கிட் பெருந்தோங்கில் சந்தேக நபராக சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் நபரை போலிசார் கைது செய்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am