
செய்திகள் மலேசியா
விற்பனையாளர் இன ரீதியாக திட்டிய சம்பவம் குறித்து போலிஸ் விசாரிக்க வேண்டும்: ஆரோன் அகோ
புத்ராஜெயா:
ஷாஆலமில் ஒரு விற்பனையாளர் இன ரீதியாக திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலிசார் விசாரிக்க வேண்டும்.
தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இதனை வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் பல இன, பல மத சமூகத்தில் இருக்கக்கூடாத இனவெறி வார்த்தைகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது/
இதனால் இவ்விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு இனத்தையும் அவமதிக்கும் எந்தவொரு வடிவத்திலும் அமைச்சகம் சமரசம் செய்யப்படாது.
குறிப்பாக இனவெறி நடவடிக்கைகள் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக டயாக் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விற்பனையாளரை வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாக திட்டியது சமூக ஊடகங்களில் வைரலானது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am