
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர் வசந்த் அபிநந்தனை நெகிரி செம்பிலான் மாநில அரசு கௌரவித்தது
சிரம்பான்
கராத்தே தற்காப்புக் கலைப் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் வசந்த் அபிநந்தன் நெகிரி செம்பிலான் மாநில அரசால் “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் 2ஆம் ஆண்டில் பயிலும் வசந்த் அபிநந்தன், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் 2 முறை தங்கம் வென்றுள்ளார்.
அவரது தொடர்ச்சியான சாதனைக்காக நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முஸ்தாபா நாகூர் வசந்த் அபிநந்தனுக்கு “மாநில விளையாட்டுத் துறைக்கான சிறந்த சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.
சாதனை தொடர வேண்டும்
“வசந்த் அபிநந்தன் தனது திறமையால் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என அவர் வாழ்த்தினார்.
“வசந்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர்கள், குடும்பத்தினர், மேலும் இவரை கௌரவித்த மாநில அரசிற்கும் நன்றி” என அம்மாணவனின் தந்தை வசந்தகுமரன் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாணவரின் சாதனை, மற்ற இளைஞர்களுக்கும் ஒரு புதிய ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm
ஷாரா கைரினா விசாரணை: ஐந்தாவது சாட்சி ஒரு உயிரியக்கவியல் நிபுணர் அல்ல
September 10, 2025, 2:47 pm