செய்திகள் வணிகம்
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
நியூ யார்க்:
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் மீது 214 மில்லியன் அமெரிக்க டாலர்"பம்ப்-அண்ட்-டம்ப்" முதலீட்டு மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மலேசியர்கள் லிம் சியாங் ஜீ, கோ சென் சாய், கிங் சங் வோங், சியோங் வீ வுன் மற்றும் கோக் வா வோங் ஆகியோர் என்றும், அவர்கள் இரண்டு தைவான் நாட்டவர்களான சியென் லுங் மா மற்றும் மிங்-ஷென் செங் ஆகியோருடன் சேர்ந்து மிதமிஞ்சிய லாபத்திற்காக பங்கு விலைகளை கையாண்டதாகக் கூறப்படுகிறது.
"அவர்கள் செய்த தவறான விளம்பரத்தினால் பங்கு வர்த்தகத்தில் செயற்கையாக விலையை உயர்த்தி விளையாடி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஆயிரக்கணக்கான பங்குகளை விற்று மில்லியன் கணக்கான டாலர்களை லாபம் ஈட்டினர்" என்று குற்றப்பத்திரிகை கூறியது.
"பம்ப்-அண்ட்-டம்ப்" திட்டம் என்பது, பங்குகளை லாபத்தில் விற்பதற்கு முன்பு, தவறான விளம்பரங்கள் மூலம் ஒரு பங்கின் விலையை செயற்கையாக உயர்த்தி, மற்ற முதலீட்டாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
