செய்திகள் வணிகம்
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
நியூ யார்க்:
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் மீது 214 மில்லியன் அமெரிக்க டாலர்"பம்ப்-அண்ட்-டம்ப்" முதலீட்டு மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மலேசியர்கள் லிம் சியாங் ஜீ, கோ சென் சாய், கிங் சங் வோங், சியோங் வீ வுன் மற்றும் கோக் வா வோங் ஆகியோர் என்றும், அவர்கள் இரண்டு தைவான் நாட்டவர்களான சியென் லுங் மா மற்றும் மிங்-ஷென் செங் ஆகியோருடன் சேர்ந்து மிதமிஞ்சிய லாபத்திற்காக பங்கு விலைகளை கையாண்டதாகக் கூறப்படுகிறது.
"அவர்கள் செய்த தவறான விளம்பரத்தினால் பங்கு வர்த்தகத்தில் செயற்கையாக விலையை உயர்த்தி விளையாடி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஆயிரக்கணக்கான பங்குகளை விற்று மில்லியன் கணக்கான டாலர்களை லாபம் ஈட்டினர்" என்று குற்றப்பத்திரிகை கூறியது.
"பம்ப்-அண்ட்-டம்ப்" திட்டம் என்பது, பங்குகளை லாபத்தில் விற்பதற்கு முன்பு, தவறான விளம்பரங்கள் மூலம் ஒரு பங்கின் விலையை செயற்கையாக உயர்த்தி, மற்ற முதலீட்டாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
