
செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது: டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் உறுதியாக கூறினார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் 130 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும்.
இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் இந்த நிலத்தில் பள்ளிவாசல் கட்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் இப்பிரச்சினை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்காக உள்ளது.
பிரதமரின் வலியுறுத்தலின் அடிப்படையில் நான் இவ்வாலயத்திற்கு வந்தேன்.
ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதே வேளையில் பொதுமக்களும் பல கோரிக்கைகளை முன்வைத்தேன்.
இவ்வாலயம் இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
எது எப்படி இருந்தாலும் மடானி அரசாங்கத்தில் எந்தவொரு ஆலயமும் உடைக்கப்படாது.
இதற்கான வாக்குறுதியை நான் வழங்குகிறேன்.
அதே வேளையில் அவர்களின் கோரிக்கைகள் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
குறிப்பாக இவ்வாலய பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுக் காணப்படும்.
இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm