செய்திகள் உலகம்
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
யாங்கூன்:
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர்வரை வேலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுவரை 7,000க்கும் அதிகமானோரை அத்தகைய நிலையங்களிலிருந்து தாய்லந்து வெளியேற்றியிருக்கிறது.
அவர்களில் அண்மையில் காப்பாற்றப்பட்ட இந்தோனேசிய குடிமக்களும் அடங்குவர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இப்போது தாய்லந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு தேசிய ஒருங்கிணைப்பு நிலையம் தேவை என்று தாய்லந்து கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் மீட்கப்பட்ட சுமார் 5,000 பேரை விசாரித்தபோது அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை தேடி சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு விருப்பப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:00 am
தலைவன் கொல்லப்பட்டாலும் தடம் மாற மாட்டோம்: ஈரான் புரட்சிகர இராணுவம் சபதம்
March 20, 2026, 10:12 am
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பெஞ்சமின் நெதான்யாகு
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
