செய்திகள் உலகம்
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
யாங்கூன்:
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர்வரை வேலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுவரை 7,000க்கும் அதிகமானோரை அத்தகைய நிலையங்களிலிருந்து தாய்லந்து வெளியேற்றியிருக்கிறது.
அவர்களில் அண்மையில் காப்பாற்றப்பட்ட இந்தோனேசிய குடிமக்களும் அடங்குவர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இப்போது தாய்லந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு தேசிய ஒருங்கிணைப்பு நிலையம் தேவை என்று தாய்லந்து கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் மீட்கப்பட்ட சுமார் 5,000 பேரை விசாரித்தபோது அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை தேடி சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு விருப்பப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
