
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு தப்பிச்சென்ற ஹசீனாவின் 31 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 281 கோடி முடக்கம்: வங்கதேச அரசு நடவடிக்கை
டாக்கா:
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது அங்கு பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்து வருகிறது.
ரூப்பூர் அணுமின் நிலையம் உட்பட 9 திட்டங்களில் இருந்து ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.80,000 கோடி மோசடி செய்ததாக டிச.17ல் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ரூ.2500 கோடியை அமெரிக்காவுக்கு பறிமாற்றம் செய்ததாக டிச.22ல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி எம்டி ஜாகிர் உசேன் விசாரித்து வந்தார். மார்ச் 11 அன்று ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டதால் 124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
நேற்று மேலும் 31 வங்கி கணக்குகளை முடக்க டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கணக்குகள் ஷேக்ஹசீனா, அவரது மகன் சஜீப் வாஸேத் ஜாய், மகள் சைமா வசேத் புட்டுல், சகோதரி ஷேக் ரெஹானா, மருமகன் ரத்வான் முஜிப் சித்திக் பாபி மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 281 கோடியும் முடக்கப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am