செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு தப்பிச்சென்ற ஹசீனாவின் 31 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 281 கோடி முடக்கம்: வங்கதேச அரசு நடவடிக்கை
டாக்கா:
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது அங்கு பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்து வருகிறது.
ரூப்பூர் அணுமின் நிலையம் உட்பட 9 திட்டங்களில் இருந்து ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.80,000 கோடி மோசடி செய்ததாக டிச.17ல் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ரூ.2500 கோடியை அமெரிக்காவுக்கு பறிமாற்றம் செய்ததாக டிச.22ல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி எம்டி ஜாகிர் உசேன் விசாரித்து வந்தார். மார்ச் 11 அன்று ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டதால் 124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
நேற்று மேலும் 31 வங்கி கணக்குகளை முடக்க டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கணக்குகள் ஷேக்ஹசீனா, அவரது மகன் சஜீப் வாஸேத் ஜாய், மகள் சைமா வசேத் புட்டுல், சகோதரி ஷேக் ரெஹானா, மருமகன் ரத்வான் முஜிப் சித்திக் பாபி மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 281 கோடியும் முடக்கப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
