
செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார். அவருக்கு 37 வயது.
அவரது நல்லுடல் மண்டாய் தகனச் சாலையில் நேற்று முன் தினம் (16 மார்ச்) தகனம் செய்யப்பட்டது.
ரேணுகா சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 2011ஆம் ஆண்டும் 2015ஆம் ஆண்டும் தென்கிழக்காசிய போட்டியில் பங்கேற்றுள்ளார். 2011இல் அவர் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் 5ஆவது இடத்தைப் பிடித்தார். 2015இல் சிங்கப்பூர் போட்டிகளை ஏற்று நடத்தியபோது அவர் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் பங்கெடுத்தார்.
அந்த 2 போட்டிகளுக்கும் இடையே அவர் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார். ஆஸ்திரேலியாவில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இனோவா தொடக்கக் கல்லூரியில் (Innova Junior College) தம்மை முழுநேர ஆசிரியராக அர்ப்பணித்துக்கொண்டார்.
ரேணுகாவின் மறைவு குறித்து அவரது சகோதரர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணை மேற்கொள்வதாக அவர் அதில் கூறியிருக்கிறார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am