செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார். அவருக்கு 37 வயது.
அவரது நல்லுடல் மண்டாய் தகனச் சாலையில் நேற்று முன் தினம் (16 மார்ச்) தகனம் செய்யப்பட்டது.
ரேணுகா சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 2011ஆம் ஆண்டும் 2015ஆம் ஆண்டும் தென்கிழக்காசிய போட்டியில் பங்கேற்றுள்ளார். 2011இல் அவர் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் 5ஆவது இடத்தைப் பிடித்தார். 2015இல் சிங்கப்பூர் போட்டிகளை ஏற்று நடத்தியபோது அவர் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் பங்கெடுத்தார்.
அந்த 2 போட்டிகளுக்கும் இடையே அவர் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார். ஆஸ்திரேலியாவில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இனோவா தொடக்கக் கல்லூரியில் (Innova Junior College) தம்மை முழுநேர ஆசிரியராக அர்ப்பணித்துக்கொண்டார்.
ரேணுகாவின் மறைவு குறித்து அவரது சகோதரர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணை மேற்கொள்வதாக அவர் அதில் கூறியிருக்கிறார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்
October 26, 2025, 10:39 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 26, 2025, 10:33 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 9:38 am
பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாட ராஷ்ஃபோர்ட் விருப்பம்
October 24, 2025, 4:01 pm
இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது
October 24, 2025, 11:20 am
