செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், மலாய் மரபுடைமை நிலையம், பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை இணைந்து அந்த முயற்சியில் இறங்கின.
இன்று தொடங்கி 6 ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களும் சில பேருந்துச் சேவைகளும் அலங்காரங்களைக் கொண்டிருக்கும்.
பாரம்பரிய உடையணிந்த குடும்பங்களின் வண்ணவண்ணப் படங்கள்.


உணவு வகைகள், பாத்திக் வடிவங்கள் போன்ற அம்சங்கள் பயணிகள் பார்த்து ரசிப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
அதோடு நோன்புப் பெருநாள் குறித்த சுவைத் தகவல்களும் உண்டு.

அடுத்த மாதம் 27ஆம் தேதிவரை பொதுமக்கள் அலங்காரங்களைக் கண்டுகளிக்கலாம்.
இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் பயணிகளுக்கும் விருந்தினர்களுக்கும் சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
