செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், மலாய் மரபுடைமை நிலையம், பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை இணைந்து அந்த முயற்சியில் இறங்கின.
இன்று தொடங்கி 6 ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களும் சில பேருந்துச் சேவைகளும் அலங்காரங்களைக் கொண்டிருக்கும்.
பாரம்பரிய உடையணிந்த குடும்பங்களின் வண்ணவண்ணப் படங்கள்.


உணவு வகைகள், பாத்திக் வடிவங்கள் போன்ற அம்சங்கள் பயணிகள் பார்த்து ரசிப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
அதோடு நோன்புப் பெருநாள் குறித்த சுவைத் தகவல்களும் உண்டு.

அடுத்த மாதம் 27ஆம் தேதிவரை பொதுமக்கள் அலங்காரங்களைக் கண்டுகளிக்கலாம்.
இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் பயணிகளுக்கும் விருந்தினர்களுக்கும் சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 5:36 pm
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்
April 27, 2026, 3:20 pm
5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை
April 27, 2026, 12:12 pm
இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்
April 27, 2026, 12:12 pm
10 மில்லியன் டாலர் இணைய மோசடி: இந்தோனேசிய நபர் தாய்லாந்தில் கைது
April 27, 2026, 10:55 am
அழுத்தம் கொடுத்துக் கொண்டே பேச்சுவார்த்தையா?: அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் கேள்வி
April 27, 2026, 10:36 am
எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: வணிக நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
April 26, 2026, 11:43 am
10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்
April 26, 2026, 10:47 am
ஜப்பானில் பயங்கரம்: மனைவியைக் கொன்று மிருகக்காட்சிசாலையின் எரிமூட்டியில் வீசிய கணவன் கைது
April 25, 2026, 5:04 pm
