
செய்திகள் மலேசியா
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
கூலிம்:
சட்டப்படி அடுத்தவரின் மனைவி அந்தஸ்துள்ள ஒரு பெண் தனது காதலனுடன் பாலியல் தொடர்பில் இருந்த போது பிடிபட்டார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை லூனாஸில் உள்ள பட்ஜெட் ஹோட்டலில் நிகழ்ந்தது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான 33 வயது பெண், தனது 30 வயது காதலனை சந்திக்க பஹாங்கிலிருந்து இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.
பகாங்கின் ஜெங்காவில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் அவர் தனது உறவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலனை சந்தித்ததாகக் கூறினார்.
அக்காதலன் இன்னும் திருமணமாகவில்லை.
இருப்பினும், அந்தப் பெண் திருமணமான பிறகு அவர்களது உறவு முடிவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் உறவினர் அந்த ஆணின் தொலைபேசி எண்ணைக் கொடுத்த பிறகு அவர்கள் சமீபத்தில் மீண்டும் இணைந்தனர்.
அந்த ஆடவர் இங்கு அருகிலுள்ள கூலிம் ஹைடேக் பார்க்கில் பாதுகாப்புக் காவலராகப் பணி புரிகிறார்.
இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து பட்ஜெட் ஹோட்டலில் தனது மனைவியை கையும் கலவுமாக பிடித்தார்.
பின் கூலிம் மாவட்ட மத அலுவலக அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.
இன்று அதிகாலை 3.40 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கூலிம் மாவட்ட மத அமலாக்க அதிகாரி அன்வர் ஷரிபுதீன் மாட் சாத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm