நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

7 வருடங்களுக்கு பின்னர் திருச்சிக்கு வருகிறது உள்நாட்டு விமானசேவை: பிஸினஸ் க்ளாஸ் இருக்கைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

திருச்சி:

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் "திருச்சி - சென்னை" மற்றும் "சென்னை - திருச்சி" வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமானசேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்தவுள்ளது. 

இதில் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர பலவித சலுகைகளுடன் அனுபவிக்கலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல், மார்ச் 23 முதல் டெல்லி காஜியாபாத் விமானநிலையத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு நேரடி விமானசேவை வழங்கவுள்ளது. 

இதிலும்  பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 26 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர் பலவித சலுகைகளுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள் என்று அந்த நிர்வாகம் கூறியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset