நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகமாக மாறிய கார் நிறுத்தும் இடம்: காரை வெளியேற்ற முடியாமல் தவித்த பெண்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவைத்திருந்த பெண் அதனை அங்கிருந்து வெளியேற்ற முடியாமல் தவித்துப் போனார். 

காலை நேரத்தில் அங்கு வெகு குறைவான வாகனங்களே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

பின் இரவில் காருக்குத் திரும்பியபோது மற்ற வாகனங்கள் ஏதுமில்லை என்றும் அவ்விடம் வெளிப்புற உணவகமாக மாறியிருந்தது/

காரைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்ததால் காரை வெளியேற்ற முடியாமல் திணறிப்போனதாக பாதிக்கப்பட்ட அப்பெண்  தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset