
செய்திகள் இந்தியா
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து
கௌஹாட்டி:
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்காக, 2 மணி நேரம் இடைவேளை விடும் நடைமுறை இருந்து வந்தது. இந்த முறை முதல்வர் சையது சாதுல்லா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 1937-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சுமார் 90 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறையை ரத்து செய்வது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களைப் போலவே பேரவை செயல்பட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிஸ்வஜித் டெய்மரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் முதல் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:52 pm
ஒடிசா அருகே நிலநடுக்கம்
February 25, 2025, 4:24 pm
மகாராஷ்டிராவில் தேர்வுக்கு பாராகிளைடிங்கில் பறந்து சென்ற மாணவரின் வீடியோ வைரல்
February 24, 2025, 12:19 pm
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டார்
February 22, 2025, 7:04 pm
ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை ஒதுக்கியதால் நொந்துபோன ஒன்றிய அமைச்சர்
February 22, 2025, 6:05 pm
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
February 20, 2025, 4:48 pm
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்
February 18, 2025, 4:24 pm