
செய்திகள் மலேசியா
தனது வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அதிகாலை டாமன்சாராவில் உள்ள தனது வீட்டில் சரிந்து விழுந்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது மகன் நஷ்ரிக் இதனை உறுதிப்படுத்தினார்.
அதிகாலை 2.30 மணியளவில் 65 வயதான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சமையலறைக்கு நடந்து செல்லும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
நாங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, என் தந்தை உணவு எடுக்க எழுந்தார்.
நடக்கத் தொடங்கிய போது அவர் நிலையற்றவராகத் தோன்றினார்.
பின்னர் திடீரென மயங்கி விழுந்தார் என்று நஷ்ரிக் தெரிவித்தார்.
அவர் சிறிது நேரத்திலேயே சுயநினைவு திரும்பினார். ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இல்ஸ்மாயிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதை நஷ்ரிக் மறுத்தார்.
என் தந்தை இப்போது மிகவும் சீராக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm