
செய்திகள் மலேசியா
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
சிப்பாங்:
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் ஷான் கோபால கிருஷ்ணன் இதனை கூறினார்.
சோள விற்பனையின் போது இனவெறி வார்த்தைகள் அடங்கிய அறிவிப்பு பலகையை வைத்ததற்கான சம்பந்தப்பட்ட கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த வர்த்தகருக்கு நானூறு ரிங்கிட் அபராதம் விதித்தது.
அதே நேரத்தில் மனைவிக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த அவரது மனைவி, செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருக்காததற்காக குடிவரவுச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அகவே இது சம்பந்தமாக, இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பேணவும், இன, மத பதட்டங்களைத் தூண்டும் எந்த வகையான அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்றும் ஷான் கோபால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm
கேஎல்ஐஏவில் பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ மூளையாக செயல்பட்டாரா?
February 22, 2025, 3:00 pm
பண்டார் செந்தோசா திட்டம் இப்பகுதி மக்களுக்கு உருமாற்றத்தை கொடுக்கும்: குணராஜ்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
February 22, 2025, 10:44 am
மன அழுத்தம் காரணமாக மனைவியைக் கொலை செய்த வயதான கணவன்
February 22, 2025, 10:14 am