
செய்திகள் மலேசியா
டி.சி.பி. சசிகலா தேவி சுப்ரமணியம் பணி ஓய்வு: மலேசிய காவல் துறையின் மறக்க முடியாத தலைவி
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய காவல் துறையில் 35 ஆண்டு கால சேவைக்கு பின், சிலாங்கூர் மாநில போலீஸ் துறை துணைத் தலைவர் டி.சி.பி. டத்தோ’ சசிகலா தேவி சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெற்றார்.
அவர் தனது போலீஸ் பயணத்தை 1989 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு பதவிகளில் கடமையாற்றிய அவர், கடைசி இரண்டு ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில போலீஸ் துறை துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றினார்.
அவரது பொறுப்புணர்வு, தன்னலமற்ற சேவை, மற்றும் தீர்க்கமான முடிவுகள் காவல் துறையில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டு வந்துள்ளன.
நேற்று, சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில், அவரது பணி ஒய்வு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் சிலாங்கூர் காவல் தலைவர் டத்தோ’ ஹுசைன் ஓமர் கான், பல்வேறு உயர் அதிகாரிகள், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
“சசிகலா தேவி என்பது பெயரல்ல, அது ஒரு பிரசித்தி பெற்ற தலைமைப் பண்புக்குரிய அடையாளம். அவரது சேவை, நெடுங்காலம் காவல் துறையில் நினைவுகூரப்படும்,” என்று டத்தோ’ ஹுசைன் உரையில் தெரிவித்தார்.
பணி ஓய்விற்குப் பின், அவர் சமூக சேவையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் காவல் துறையிலிருந்து கற்றதையும் சமூகத்திற்கு பயனாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா தேவி – ஒரு வீரத்திற்குரிய காவலர், ஒரு சிறந்த தலைவி, ஒரு மறக்க முடியாத வழிகாட்டி!
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm
கேஎல்ஐஏவில் பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ மூளையாக செயல்பட்டாரா?
February 22, 2025, 3:00 pm
பண்டார் செந்தோசா திட்டம் இப்பகுதி மக்களுக்கு உருமாற்றத்தை கொடுக்கும்: குணராஜ்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
February 22, 2025, 10:44 am