
செய்திகள் மலேசியா
நீலாயில் நிகழ்ந்த தீ விபத்தில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கம்பளங்கள் தீயில் எரிந்து நாசமாகின: நிர்வாக இயக்குநர்
நீலாய்:
நீலாய் நிகழ்ந்த தீ விபத்தில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கம்பளங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
கார்பெட் பிரிமா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே. ராஜேஷ் இதனை கூறினார்.
நீலாய் 3இல் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து நிகழந்தது.
ஒட்டுமொத்த தொழிற்சாலையும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்நிலையில் இவ்விபத்து குறித்து ராஜேஷ் கூறியதாவது,
நான் வீட்டில் இருந்த போது சம்பவம் குறித்து பாதுகாவலரிடமிருந்து அழைப்பு வந்தது.
காலை 8 மணிக்கு கடை திறக்கும்போது டிக்டோக்கில் நேரலைக்குச் செல்வதற்குத் தயாராக, பிரதான சுவிட்சை இயக்குமாறு ஊழியரிடம் சொன்னேன்.
திடீரென்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, மெயின் சுவிட்சை ஆன் செய்தபோது ஒரு சத்தம் கேட்டதாகக் கூறினார்.
உடனே நான் அவரை வெளியே வந்து நிலைமையைக் கண்காணிக்கச் சொன்னேன்.
சாலையின் மறுபக்கத்தில் இருந்து வந்த ஒருவர், தொழிற்சாலையில் இருந்து புகை வருவதாகக் கூறி பாதுகாப்புக் காவலரிடம் சத்தமிட்டார்.
பின்னர் அவர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியவில்லை. தீயணைப்புத் துறை இன்னும் விசாரித்து வருகிறது.
ஆகையால் முதலில் தீயணைப்புத் துறையினர் தங்கள் வேலையைச் செய்யட்டும்.
ரமலான், நோன்பு பெருநாளுக்கு தயாராகும் வகையில் தனது நிறுவனம் கம்பளங்களின் விநியோகத்தை அதிகரித்துள்ளது.
ஆனால் அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கிட்டத்தட்ட 30 மில்லியன் ரிங்கிட் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm
கேஎல்ஐஏவில் பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ மூளையாக செயல்பட்டாரா?
February 22, 2025, 3:00 pm
பண்டார் செந்தோசா திட்டம் இப்பகுதி மக்களுக்கு உருமாற்றத்தை கொடுக்கும்: குணராஜ்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am