நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொஸ்மா சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்வதை அரசாங்கம் உறுதி செய்யும்: சைஃபுடின்

கோலாலம்பூர்: 

பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகளுக்கான சொஸ்மா சட்டத்தைப் பூர்த்தி செய்வதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சிறப்பு பணிக்குழு தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சொஸ்மா சட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக சைஃபுடின் நாடாளுமன்றத்தில் 
இன்று கூறினார்.

தேச நிந்தனை சட்டம் 1948 உட்பட அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆறு சட்டங்களை இந்த மறுஆய்வு உள்ளடக்கியது என்றும் அவர் விளக்கினார்.

2012-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

சொஸ்மாவின் கீழ், காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கும் ஒருவரைக் கைது ஆணை இன்றி கைது செய்து தடுத்து வைக்கலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset