நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய சோள விற்பனையாளர் மன்னிப்பு கேட்டார் - ஏரன்

 

புத்ராஜெயா -
சர்ச்சைக்குரிய சோள விற்பனையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ கூறினார்.

இனவெறிப் பலகையைக் காட்டி சர்ச்சையைக் கிளப்பிய சோள வியாபாரி ஒருவர்,  

நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய தனது செயல்களுக்காக முழு மலேசியர்ளிடம் குறிப்பாக இந்தியர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த வர்த்தகர் எதிர்காலத்தில் இந்தச் செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.

ருக்குன் தெத்தாங்கா பிரிவின் தலைவர்களான ரோஸ்மன், சியாவல் ஆகியோர் இந்த சர்ச்சையைத் தீர்ப்பதில் மத்தியஸ்தர்களாக இருந்துள்ளனர்.

இந்த சர்ச்சையைத் தீர்ப்பதில் அவர்களின் பங்கு  ஒற்றுமை, பிரச்சினைகளைத் தீர்க்கும் முகவராக   சமூகத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

இது ஒரு இணக்கமான, அமைதியான சூழ்நிலையைப் பேணுவதை உறுதி செய்வதற்கு சமூகத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset