![image](https://imgs.nambikkai.com.my/IMG-20250215-WA0369.jpg)
செய்திகள் மலேசியா
சோளம் விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சோளம் விவகாரம் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இதனை வலியுறுத்தினார்.
மன்னித்து விடுங்கள். இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை என்ற வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இதுபோன்ற செயல்கள் முழு மலாய் சமூகத்தையும் பிரதிபலிக்கவில்லை
மாறாக தீவிரமான ஒரு சில தனிநபர்களை மட்டுமே பிரதிபலிக்கின்றது என்று அவர் கூறினார்.
இதில் ஆபத்து என்னவென்றால், அது மற்ற சமூகங்களிடமிருந்து எதிர்வினையைத் தூண்டக்கூடும்.
உதாரணமாக ஒரு கோபமான மலேசிய இந்திய வர்த்தகர் அதே போன்ற பலகையை வைப்பது,
இறுதியில் அது விரோதச் சங்கிலியைத் தூண்டக்கூடும் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
அவை தொடர அனுமதிப்பது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அவமானப்படுத்துதல், வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவது மலேசியாவின் சமூக நல்லிணக்கத்தைச் சேதப்படுத்தும்.
இனங்களுக்கு இடையே பிரிவினை, அவநம்பிக்கையின் நெருப்பைத் தூண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 19, 2025, 1:42 pm
சில சொஸ்மா குற்றங்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு ஆலோசிக்கின்றது: சைஃபுடின்
February 19, 2025, 1:17 pm
சொஸ்மா சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்வதை அரசாங்கம் உறுதி செய்யும்: சைஃபுடின்
February 19, 2025, 12:54 pm
தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்படுவதால் மக்கள் பயன் பெறுவார்கள்: குணராஜ்
February 19, 2025, 12:52 pm
ஸ்டீவன் சிம்மைத் திட்டிய உதவியாளர் மீது இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை: அந்தோனி லோக்
February 19, 2025, 12:47 pm
இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
February 19, 2025, 12:43 pm
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 பேர் மரணம் ஊக்க போதை மருந்துகளே காரணம்: டத்தோ ஹுசைன் ஒமார் கான்
February 19, 2025, 12:32 pm
மலேசிய கைதி பன்னிர் செல்வத்தை விடுவிக்க காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம் கடைசி நிமிட வேண்டுகோள் விடுத்துள்ளது
February 19, 2025, 10:24 am
வெளிநாட்டினரின் 12 கடப்பிதழ்களை இடுப்பில் மறைத்து வைத்திருந்த கேஎல்ஐஏ குடிநுழைவு அதிகாரி சிக்கினார்
February 19, 2025, 10:07 am