![image](https://imgs.nambikkai.com.my/9-2b7a9.jpg)
செய்திகள் மலேசியா
மதத்தை அவமதிப்பதற்கான ஒரு கருவியாகக் கருத்து சுதந்திரம் இருக்க கூடாது: ஆரோன் அகோ டாகாங்
கோலாலம்பூர்:
கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ பயன்படுத்தப்படும் ஒரு கருவியல்ல என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் அனைவருக்கும் நினைவூட்டினார்.
அனைத்து தரப்பினரும் மதம் குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
போலி செய்திகள் அல்லது மதம் பற்றிய கோபத்தைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடுவது நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையைச் சீர்க்குலைக்கும் என்றார் அவர்.
இன்று தேசிய ஒற்றுமை அமைச்சகத்துடன் இணைந்து பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் (MCCBCHST) ஆகியவற்றிற்கான மலேசிய ஆலோசனைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மத நல்லிணக்க வாரத்துடன் இணைந்து ஜெஜாக் ஹார்மோனி திட்டத்தைத் தொடங்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இது சம்பந்தமாக, மதம் மற்றும் இனம் தொடர்பான ஒவ்வொரு விவாதத்திலும் முதிர்ச்சியடைந்த அணுகுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், வலுவான நல்லிணக்கம், ஒற்றுமையை உருவாக்க பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆரோன் அழைப்பு விடுத்தார்.
தகவல்களைப் பரப்புவதில் சமூக ஊடகங்கள் ஒரு முக்கிய தளமாகும். ஆனால் அது முழு பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 15, 2025, 10:12 pm
சோளம் விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 15, 2025, 9:11 pm
மன்னித்து விடுங்கள்; இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை: வைரலாகும் வீடியோ பதிவு
February 15, 2025, 9:10 pm
நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
February 15, 2025, 9:06 pm
மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 245 தோட்ட பாட்டாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டப்படும்: பிரதமர் அன்வார்
February 15, 2025, 7:23 pm