
செய்திகள் இந்தியா
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துங்கள்: சோனியா காந்தி
புது டெல்லி:
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் அவர் பேசுகையில், 140 கோடி மக்களின் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சுமார்
14 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது.
2021ஆம் ஆண்டே அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நிகழாண்டு அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளும் எடுத்துரைக்கின்றன என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am