செய்திகள் வணிகம்
இறக்குமதி வாகனங்களை ஏற்றிவரும் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வந்துசேரும்: முன்பணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை
கொழும்பு:
எதிர்வரும் 25, 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் இலங்கை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன.
இதன்படி, எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.
எனவே, அதுவரையில் முன்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
- நிஹார்தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
March 3, 2026, 4:42 pm
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
March 2, 2026, 3:31 pm
மலேசிய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: ரிங்கிட் மதிப்பு கணிசமாக உயர்வு
February 27, 2026, 1:30 pm
மலேசிய ரிங்கிட், பிற முக்கிய நாணயங்களைவிட வலுவடைந்துள்ளது
February 26, 2026, 4:39 pm
2 பில்லியன் டொலர் திட்டம்; டிஜிட்டல் மையமாக உருவாகும் மலேசியா: டத்தோ ஸ்ரீ அன்வார்
February 26, 2026, 4:30 pm
Absolute பஜார் X பெஸ்டிவல் காயா ராயா 2026: 5ஆம் ஆண்டில் புதிய சாதனைகளை நோக்கிய பிரம்மாண்டப் பயணம்
February 25, 2026, 3:42 pm
40 ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதித் தடை விதிக்கும் சீனா
February 23, 2026, 11:31 am
