
செய்திகள் இந்தியா
பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டு சிறைகளில் 10,512 இந்தியர்கள்
புது டெல்லி:
வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியர்கள் அடைபட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷியா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், அர்ஜென்டீனா உள்பட 86 நாடுகளின் சிறைகளில் மொத்தம் 10,152 இந்தியர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 2,633 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,518 பேரும் சிறையில் உள்ளனர்.
பாகிஸ்தான் 166, இலங்கையில் 98 பேர் சிறையில் உள்ளனர். கத்தார் சிறைகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 611 பேர் உள்ளனர்.
இது தொடர்பாக அங்குள்ள தூதரகங்கள் கண்காணித்து வருகின்றன. அவர்களின் வழக்குகளை எதிர்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு சட்டங்களை மதிக்காமை, கொலை, அத்துமீறி ரகளையி ஈடுபடுதல், விசா இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கி இருத்தல், போதை, கடத்தல் என்று பல்வேறு குற்றப் பின்னணியில் அவர்கள் சிறையில் உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm