செய்திகள் மலேசியா
சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை; இவ்வாண்டு முதல் அமலுக்கு வரும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு முதல் சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இவர்கள் 1,400க்கும் மேற்பட்ட மருத்துவ கிளினிக்குகளில் எந்தக் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.
இப்புதிய திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தத் தொடங்கும்.
இதுவரை பங்களிப்பாளர்களின் நலன், பாதுகாப்பிற்காக மறுவாழ்வு, டயாலிசிஸ், ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல வசதிகள், சலுகைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் பங்களிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்.
கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சை கோரிக்கைகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டது.
இதில் சொக்சோவின் பேனல் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.
தொழிலாளர்கள் சிகிச்சை செலவுகளை முன்கூட்டியே செலுத்தி, ஒரு மாதத்திற்குப் பிறகு சொக்சோவிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு முதல் இலவசமாக சிகிச்சைகளை பெறலாம்.
அங்கு தொழிலாளர்கள் எந்த சிகிச்சை செலவுகளையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை.
தொழிலாளர்கள் இப்போது சிகிச்சை பெற எந்தவொரு சொக்சோ பேனல் கிளினிக்கிலும் தங்கள் அடையாள அட்டையைக் காட்டினால் போதும்.
சிகிச்சைக்கான செலவை சொக்சோ முழுமையாக ஈடுகட்டும்.
இதனால் தொழிலாளர்கள் எந்த நிதிச் சுமையும் இல்லாமல் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.
சொக்சோவின் சீனப் புத்தாண்டு சிறந்த இல்ல உபசரிப்பில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 11:40 pm
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
November 11, 2025, 11:30 pm
மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்
November 11, 2025, 11:23 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப்தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 11, 2025, 10:48 pm
இந்தியர்களுக்கான அரசாங்க உதவிகளும் சலுகைகளும் நிலைநாட்டப்பட வேண்டும்: டான்ஸ்ரீ இராமசாமி
November 11, 2025, 5:53 pm
சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புக்கிட் அமானில் குடும்பத்தினர் மகஜர்
November 11, 2025, 2:36 pm
சபாவிற்கான 40 சதவீத வருவாய் உரிமைகள்; மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர்
November 11, 2025, 2:32 pm
கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர் போலிசாரின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்
November 11, 2025, 10:44 am
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
November 11, 2025, 10:43 am
