
செய்திகள் மலேசியா
சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை; இவ்வாண்டு முதல் அமலுக்கு வரும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு முதல் சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இவர்கள் 1,400க்கும் மேற்பட்ட மருத்துவ கிளினிக்குகளில் எந்தக் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.
இப்புதிய திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தத் தொடங்கும்.
இதுவரை பங்களிப்பாளர்களின் நலன், பாதுகாப்பிற்காக மறுவாழ்வு, டயாலிசிஸ், ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல வசதிகள், சலுகைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் பங்களிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்.
கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சை கோரிக்கைகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டது.
இதில் சொக்சோவின் பேனல் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.
தொழிலாளர்கள் சிகிச்சை செலவுகளை முன்கூட்டியே செலுத்தி, ஒரு மாதத்திற்குப் பிறகு சொக்சோவிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு முதல் இலவசமாக சிகிச்சைகளை பெறலாம்.
அங்கு தொழிலாளர்கள் எந்த சிகிச்சை செலவுகளையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை.
தொழிலாளர்கள் இப்போது சிகிச்சை பெற எந்தவொரு சொக்சோ பேனல் கிளினிக்கிலும் தங்கள் அடையாள அட்டையைக் காட்டினால் போதும்.
சிகிச்சைக்கான செலவை சொக்சோ முழுமையாக ஈடுகட்டும்.
இதனால் தொழிலாளர்கள் எந்த நிதிச் சுமையும் இல்லாமல் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.
சொக்சோவின் சீனப் புத்தாண்டு சிறந்த இல்ல உபசரிப்பில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 8:47 am
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm
கொலம்போங்கில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்
September 15, 2025, 4:36 pm