நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெரிக்கில் ஹிட்-அண்ட்-ரன் சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு

ஈப்போ: 

கெரிக் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் சாலையோரத்தில், நண்பரின் வாகனம் பழுதடைந்து நின்றபோது அதற்கு எரிபொருள் நிரப்ப உதவிய 21 வயது இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தால் கொல்லப்பட்டார்.

கெரிக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூப். அப்துல் சாமத் ஒத்மான் சம்பவம் நேற்று மதிய நேரத்தில் கெரிக்-ஜெலி நெடுஞ்சாலை KM2.6 இடத்தில் நடந்ததாகத் தெரிவித்தார்.

தொடக்ககட்ட விசாரணைகளில், ஒரு ப்ரோட்டான் சாகா வாகனம் எண்ணெய் இன்றி சாலையோரத்தில் நின்றதனால் அதன் டிரைவர் பாதிக்கப்பட்டவர் காரை எரிபொருள் ஊற்ற கொண்டு வருமாறு தொடர்பு கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்திற்கு சென்று காரில் எரிபொருள் ஊற்றும் போது, ஜெலியில் இருந்து கெரிக்கிற்கு வந்த ஒரு வெள்ளை கார் அவர்களை மோதிச் சென்றது,” என்று அப்துல் சாமத் இன்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர் கெரிக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி அந்த மாலை உயிரிழந்தார்.

ப்ரோட்டான் சாகா வாகனத்தின் டிரைவர் சம்பவத்தில் காயமடையவில்லை என்று அப்துல் சாமத் உறுதி செய்தார்.

 காவல் துறையினர் அந்த வெள்ளை காரின் உரிமையாளர்த் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம், பிரிவு 41(1) படி, கவனக்குறைவான அல்லது ஆபத்தான இயக்கம் காரணமாக மரணம் ஏற்பட்டது என விசாரணை செய்யப்படுகிறது.

ஏதேனும் தகவல் உள்ள பொதுமக்கள் கெரிக் மாவட்ட காவல் நிலைய போக்குவரத்து பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset