நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் லிவர்பூல்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு லிவர்பூல் அணியினர் முன்னேறியுள்ளனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை கோட் காப்கோ, முஹம்மத் சாலா, டோமினிக், வெர்ஜில் வான் டிஜ்க் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset