செய்திகள் விளையாட்டு
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
லண்டன்:
ஆர்செனல் அணியின் மேலாளர் மிக்கேல் ஆர்டெட்டா, லீக் கப் இறுதிப் போட்டியில் கோல்கீப்பரின் தவறால் ஆர்செனல் அணி மான்செஸ்டர் சிட்டியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது என தெரிவித்தார்.
இரண்டாம் பாதியில் நடந்த முக்கிய தருணத்தில், ரயான் செர்கியின் பந்தை கெப்பா சரியாக கையாளாமல் விட்டதால், நிக்கோ ஓ'ரெய்லி எளிதாக முதல் கோலைப் பதிவு செய்தார்.
இந்த நான்கு நிமிடங்களில், அவர் மீண்டும் கோல் அடித்து சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.
லீக் கப் தொடரில் முழுவதும் கெப்பாவையே முதன்மை கோல்கீப்பராக பயன்படுத்தியதாகக் கூறிய ஆர்டேட்டா, வழக்கமான கோல்கீப்பர் டேவிட் ராயாவை மாற்றி அவர்மீது நம்பிக்கை வைத்ததாக விளக்கினார்.
“இத்தகைய தவறுகள் கால்பந்தின் ஓர் அங்கமே; ஆனால் இன்று அது முக்கிய தருணத்தில் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது,” என அவர் தெரிவித்தார்.
இப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் 2020க்குப் பிறகு முதல் முக்கிய கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருந்தும், தற்போது லீக்கில் ஒன்பது புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் ஆர்செனல், அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் தவறிவிட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 22, 2026, 9:17 am
பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி
March 22, 2026, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 21, 2026, 8:33 am
"இனவெறிக்கு இடமில்லை": இஸ்ரேல் காற்பந்துச் சங்கத்திற்கு RM800,000 அபராதம்
March 21, 2026, 8:17 am
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
March 21, 2026, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 20, 2026, 9:15 am
