செய்திகள் உலகம்
ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஆப்கன் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானில் சட்டபூர்வமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவர்களின் நாட்டுக்கு படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்களை அந்த நகரங்களிலிருந்து வெளியேற்றி பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் போர்களின்போதும் ஏராளமான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கன் அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
