செய்திகள் உலகம்
ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஆப்கன் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானில் சட்டபூர்வமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவர்களின் நாட்டுக்கு படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்களை அந்த நகரங்களிலிருந்து வெளியேற்றி பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் போர்களின்போதும் ஏராளமான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கன் அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
