செய்திகள் இந்தியா
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
கொச்சின்:
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த காணொலி வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்த கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.
சிறுவனுக்கும், அவனது தாய்க்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறுவன் சாங்குவின் தாய் கூறுகையில், ‘‘ இந்த காணொலி சமூக ஊடகத்தில் வெளியானதில் இருந்து பலர் எனக்கு போன் செய்து சாங்குவுக்கு பிரியாணியையும் பொரித்த கோழியும் வழங்க முன்வந்துள்ளனர்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 6:57 am
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
February 4, 2025, 1:07 pm
அமெரிக்காவில் வசித்த இந்தியக் கள்ளக்குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டது
February 4, 2025, 12:45 pm
சீனா தொழில்துறையில் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி
February 4, 2025, 10:52 am
சொந்த மாணவனையே திருமணம் செய்துகொண்ட பேராசிரியர்: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
February 3, 2025, 6:55 pm
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளி
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 7:19 pm
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
February 2, 2025, 4:14 pm