செய்திகள் இந்தியா
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புது டெல்லி:
கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
விஜய் கிஷோர் கோஸ்வாமி தாக்கல் செய்த பொது நல மனுவில், விஐபி தரிசனத்துக்கு கோயில்களில் ரூ.400, ரூ.500 என சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை, அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பக்தர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடாகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டும் முழுமையான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. எனவே, கோயில்களில் விரைவான தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விஐபி தரிசன நடைமுறையை ரத்து செய்ய உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. அப்போது, கோயில்களில் சிறப்பு சலுகை வழங்க கூடாது என்ற கருத்தை நாங்கள் கொண்டிருந்தாலும் கூட, இந்த நீதிமன்றத்தால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது.
அதிகார வரம்பை பயன்படுத்த பொருத்தமான வழக்கு எண்ணவில்லை. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் கோயில் நிர்வாகங்களும் சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2025, 7:19 pm
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
February 2, 2025, 4:14 pm
7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு
February 1, 2025, 9:05 am
சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி
February 1, 2025, 8:59 am
தில்லி தேர்தலைக் கலக்கும் யமுனை மாசு
January 30, 2025, 3:02 pm
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
January 30, 2025, 2:59 pm
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
January 29, 2025, 10:54 pm
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
January 29, 2025, 3:12 pm
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
January 28, 2025, 5:08 pm